இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கத்தோலிக்க சங்கம் கண்டனம்

பெரம்பலூர்,ஏப்.25: இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பெரம்பலூர் கத்தோலிக்க சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளின்போது தேவாலங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெரம்பலூரிலுள்ள புனித பனி  மயமாதா தேவாலயத்தில் பெரம்பலூர் கத்தோலிக்க சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று  பீட்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் மகிமைதாஸ், செயலா  ளர் அகரம் திரவியராஜ், பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  செயற்குழு உறுப்பினர்கள் இருதயசாமி, ரவி சித்தார்த்தன், பிளாட்டோ உள்பட  பலரும் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில்  புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் தீவிரவாதிகள் தொடர்  மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட னர். இந்த கோர சம்பவத்தில் ஏறத்தாழ  300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் உலகம்முழுவதும்  வாழ்கிற கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்களி டையே பெரும் வேதனையை  ஏற்படுத்தியுள்ளது. மனித நேயத்திற்காக தனது இன்னுயிரை  கொடுத்து  இயேசுகிறிஸ்து, உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நடை பெற்ற வேளையில்,  மனித மாண்பை சிதைக்கும் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை பெரம்பலூர்  கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை அரசு  இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நாசகார சக்திகளை இனம்கண்டு, அவர்களை  வேறோடு அழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு இந்த அவசரக்கூட்டத்தில்  இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும்  கிறிஸ்தவர்கள் குணமடைய சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. குடந்தை மறைமாவட்ட பொறுப்பாளர் சேவியர் துரை நன்றி தெரிவித்தார்.

Related Stories: