கோவில்பட்டி, ஏப். 24: கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓடை தடுப்பு சுவரானது மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதால் விபத்துகள் தொடர்கின்றன. எனவே, தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவில்பட்டி அருகே மதுரையில் இருந்து நெல்லை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலை கல்லூரி அமைந்துள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலை வழியாக மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி மார்க்கமாகவும், சங்கரன்கோவில் கழுகுமலை, புளியங்குடி, கடையநல்லூர் மார்க்கமாகவும் அதிகளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், வேன்கள், கன்டெய்னர் லாரிகள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் கடந்து செல்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி இருந்து தனியார் கலை கல்லூரி முன்புறம் வழியாக சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த கல்லூரிகள் முன்புறம் 10 அடி ஆழம் கொண்ட ஓடை செல்கிறது. இதனால் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டபோது,