ஈரோடு, ஏப். 24: இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்தியூர் அடுத்துள்ள புதுராசாம்பாளையம், பழையராசாம்பாளையம் ஆகிய கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆகையால், கடந்தாண்டு இப்பகுதி மக்களுக்கு இலவச பட்டா வழங்க வருவாய்த்துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால், ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக பட்டா வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.