மதுரை தெற்கு மாவட்ட காங். நிர்வாகிகள் நியமனம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, ஏப். 24: மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் சிலரை நியமித்து கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் வட்டார, சர்க்கிள் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களோடு காங்கிரஸ் கட்சியினர் இணைந்து பணியாற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் கிழக்கு வட்டார தலைவராக முத்துவேல், தெற்கு வட்டார தலைவராக பெருமாள், மேற்கு வட்டார தலைவராக காசிநாதன் மற்றும் 11வது சர்க்கிள் காங்கிரஸ் தலைவராக செந்தில், 12வது சர்க்கிள் தலைவராக ராமசாமி, 13வது சர்க்கிள் காங்கிரஸ் தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: