மதுரை, ஏப். 24: கொலையுண்ட கணவரின் கண்களை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய அவரது மனைவியை பலரும் பாராட்டினர்.
மதுரை திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(55). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ரேடியாலிஜிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை திருப்பரங்குன்றம் ரோட்டில் உடல்முழுவதும் பலத்த காயங்களுடன் கிடந்த இவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். முதலில் வாகன விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஸ்கரனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சந்தேகம் ஏற்பட்டது.