கன்னியாகுமரி, ஏப். 24: கன்னியாகுமரி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.கன்னியாகுமரி அருகே உள்ளது பொற்றையடி. இங்கு நாகர்கோவிலில் இருந்து வரும் புதிய 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. பல இடங்களில் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றன.இந்த நிலையில் நேற்று காலை பொற்றையடி பகுதி பொதுமக்கள் முட்புதர்களுக்கு இடையே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை கண்டனர். இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்ெபக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் முக்கால் பேன்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். அவை கிழிந்த நிலையில் காணப்பட்டன. உடல் அழுகிய நிலையில் இருந்தது.