மார்த்தாண்டம், ஏப். 24: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ₹220 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு, தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பாலத்தின் கீழ் பகுதி சாலையில் முக்கிய சந்திப்புகளில், குறிப்பாக ஏற்கனவே செயல்பட்டு வந்த பஸ் நிறுத்தம் பகுதிகளில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.இதையடுத்து வெட்டுவெந்நியில் தற்போது பயணிகள் நிழலகம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதேவேளை வெட்டுெவந்நி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் சாலை பிரிந்து செல்லும் இடம் திடீர் வளைவு மற்றும் பள்ளமான பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதேப்ேபான்று விபத்துக்களுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.எனவே வெட்டுவெந்நி தேங்காப்பட்டணம் சாலையில் நகராட்சி வணிக வளாகத்தின் கீழ் பகுதியில் பாதுகாப்பாக நிழலகம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று நிலழகம் அமைப்பதற்கான தளம் உறுதிபடுத்தும் பணி நடந்தது. இதற்காக ராட்சத வாகனத்தில் காங்கிரீட் கலவை தயார் செய்து ெகாண்டு வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங் தலைமையில், குழித்துறை நகர காங். தலைவர் அருள்ராஜ், மாவட்ட ெசயலாளர் ரீகன், ராபிக் உள்ளிட்டோர் சம்பவ இடம் வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.