பீர்பாட்டிலால் தொழிலாளியை குத்தியவர் கைது

சத்தியமங்கலம், ஏப். 23: சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சத்தி ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி பிரபு (55) என்பவரும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (30) என்பவரும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தினேஷ் பீர்பாட்டிலால் பிரபுவின் கன்னத்தில் வலது தாடையில் குத்தியுள்ளார்.  இதைக்கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த பிரபுவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். புகாரின் பேரில் தினேசை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: