நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அரவக்குறிச்சியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாநில மகளிர் தொண்டரணி இணைச்செயலாளர் ராணி, சட்டதிட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: