பட்டய தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம்

பெரம்பலூர், ஏப். 23: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது:2018 ஜூன் மாதத்தில் நடந்த தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் இன்று (23ம் தேதி) முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: