கொள்ளிடத்தில் இயற்கை வளங்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்திற்கு வரவேற்பு

கொள்ளிடம், ஏப்.23: உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் அரசு ஆணைகளின் படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து நீர் நிலைகளையும் முறைப்படி அளவீடு செய்து பாதுகாத்திட வலியுறுத்தியும் நீர்நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்கவும் புதிதாக ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் இவைகளை புணரமைத்திடவும், அனைத்து மரங்களை பாதுகாத்திடவும் வலியுறுத்தி பிரசார பயணத்தை சித்த மருத்துவரும் இயற்கை வளங்கள் பாதுகாப்போர் நல பேரவையின் பொதுச்செயலாளருமான துரைபாலகுரு, கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி திருவாரூரில் துவங்கி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி வழியே  சென்னை செல்லும் வழியில் கொள்ளிடம் கடை வீதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொள்ளிடம் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சம்மந்தம், இணை செயலாளர் கதிரவன், தி.க ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், சமூக ஆர்வலர் காமராஜ் உள்ளிட்டோர் பாலகுருவுக்கு வரவேற்பு அளித்து நினைவுப்பரிசு வழங்கினர்.

Related Stories: