தாண்டவன்குளம் மும்மாரி அம்மன் கோயிலில் சித்ரா பவுணர்மி விழா

கொள்ளிடம், ஏப்.23: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே தாண்டவன்களம் மும்மாரி அம்மன்கோயிலில் சித்திரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு யாகமும், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. விழாவில்  வசிஷ்டர்வழிச்சித்தர், செந்தமிழ்சுவாமிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், கொள்ளிடம் அருகேயுள்ள கீரங்குடியில் உள்ள குடவரசியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Related Stories: