மதுரை, ஏப். 22: அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்க வந்த வாலிபரிடம் செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியவர்களை தேடி வருகின்றனர். மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ெஜயகுமார்(26). இவர் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண வந்தார். தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே அழகரை தரிசனம் செய்துகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர், ஜெயகுமாரிடமிருந்த, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றார். இதைப்பார்த்த கூட்டத்திலிருந்த சிலர் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவர் தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர், அலங்காநல்லூர் அருகே உள்ள பொந்துகம்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெயமணி மகன் மணி(22) என்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். இதேேபால் ஆரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரிடமிருந்த, செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றவிட்டார்.