வித்யாசாகர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சப்-ஜுனியர் பேட்மிண்டன் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு

செங்கல்பட்டு, ஏப்.22: வித்யாசாகர் கல்வி நிறுவனங்களின் பேட் மிண்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சப் ஜூனியர் ேபட் மின்டன் போட்டி செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ேசர்ந்த 300 மாணவர்கள் 13, 15, 17 ஆகிய வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் வி.எஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் மாரிச்சாமி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ேபட்மின்டன் சங்க தலைவர் மாறன், செயலாளர் ராகவன் ஆகியோர் போட்டியை துவங்கி வைத்தனர். 3 நாட்களில் 327 போட்டிகள் நடைபெற்றன. நிறைவு நாளான ேநற்று பரிசளிப்பு விழா நடந்தது. விஎஸ் பேட்மின்டன் அகாடமி நிறுவன தலைவரும், வித்யாசகர் கல்வி குழும தாளாருமான விகாஸ் சுரானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு தரவரிசை போட்டிகளில் வெற்றிபெற்ற 72 மாணவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

Related Stories: