செங்கம், ஏப்.22: செங்கம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தது. செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் காற்று பலமாக வீசியதால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளி வெட்டுக்காக காத்திருந்தபோது வாழை மரங்கள் சாய்ந்தது விவசாயிகளை வேதனை அடைய செய்தது.