திருச்செங்கோடு, ஏப்.19: திருச்செங்கோடு அருகே அணிமூர் கிராமத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் குப்பை கிடங்கு மற்றும் உரம் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. திருச்செங்கோடு நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தினந்தோறும் 34 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேரிக்கப்படுகின்றன. இதில் 20 மெட்ரிக் டன் மக்கும் குப்பை. 14 மெட்ரிக் டன் மக்காத குப்பை ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், அணிமூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி, தரம் பிரித்து உரமாக மாற்றப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி குப்பை கழிவுகளை கொட்டியதால், அணிமூர் கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக, அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனால் குப்பை கிடங்கை அங்கிருந்து இடமாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.