மேட்டுப்பாளையத்தில் தேர்தல் விதிமுறை மீறி கூட்டம் நடத்திய அதிமுகவினர் போலீசில் பறக்கும் படை அதிகாரி புகார்

திருத்துறைப்பூண்டி, ஏப்.18: திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் தேர்தல் விதிமுறை மீறிகூட்டம் நடத்தியஅதிமுகவினர் மீது தேர்தல் பறக்கும் படைஅதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் அதிமுக கிளை செயலாளர் குமார் , ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் கூடியிருந்தனர் அவர்களிடையே முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விதிமுறை மீறிஅதிமுகவினர் கூட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கமலராஜன், சஞ்சீவிராஜா தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர் இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கமலராஜன் , சஞ்சீவிராஜா ஆகியோர்  திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தேர்தல் விதிமுறை மீறிகூட்டம் நடத்திய அதிமுகவினர்  குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

Related Stories: