நாகர்கோவில், ஏப்.18: குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற இதர வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற விவரத்தை பள்ளி அறிவிப்பு பலகையில் பெற்றோர் அறியும் வண்ணம் அங்கீகார ஆணை எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை குறிப்பிட்டு வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.