சேலம், ஏப்.18: சேலம் மத்திய சிறையில் இருக்கும் குண்டாஸ் கைதிகள் ஓட்டுப்போட மறுத்து விட்டனர். அதே போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான கைதிகள் ஓட்டுப் போட ஆர்வம் இல்லை என தெரிவித்து விட்டனர். தமிழக மத்திய சிறைகளில் இருக்கும் குண்டாஸ் கைதிகளுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி உண்டு. விசாரணை கைதிகளுக்கு கிடையாது. அதன்படி இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுபோட குண்டாஸ் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டனர். சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், வேலூர், பாளையங்கோட்டை, கடலூர் உள்பட 9 மத்திய சிறைகளில் 862 கைதிகள் இருப்பது தெரியவந்தது. தேர்தலில் வாக்களிக்க விருப்பமா? என சிறை அதிகாரிகள் அவர்களிடம் கேட்டனர்.