தா.பேட்டை, ஏப்.17: பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி தொண்டர்களின் பேரணியுடன் முசிறியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி நேற்று திருச்சி மாவட்டம், முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிரசாரம் மேற்கொண்டார். தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். முசிறி கைகாட்டியில் வேட்பாளர் சிவபதி பேசுகையில் நான் அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட முயற்சியின் பலனாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முசிறியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை நான்கு வழிச்சாலையும் செயல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.