மேலூர், ஏப். 17: மேலூர் அருகே திருமணமான 6வது நாளில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ஒய்யப்பன். இவரது மகள் ராஜலட்சுமி (24). இவருக்கும், எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரபாண்டிக்கும் (27), கடந்த 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. மறுநாளே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் வீரபாண்டி, மாமனார் வெள்ளைச்சாமி ஆகியோர் ராஜலட்சுமியை, அவரது தந்தை வீட்டில் நேற்று விட்டுச்சென்றனர்.