நாகை, ஏப்.17: நாகையிலிருந்து திருவாரூர் வழியாக பகல்நேர ரயில் சேவை துவங்கப்படும் என அதிமுக வேட்பாளர் தாழை.சரவணன் கூறினார்.நாகை மக்களளை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தழைசரவணன் தனது தேர்தல் பிசாரத்தை நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி தம்பிதுரைபூங்கா, ஆஸ்பத்திரிரோடு, பாரதிமார்க்கெட், அபிராமி அம்மன் திடல், பப்ளிக்ஆபீஸ்ரோடு வழியாக மீண்டு பழைய பேருந்து நிலையத்தில் முடித்தார். பிரசாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் வேதரெத்தினம், மாவட்ட செயலாளர் வரதராஜன், தேமுதிக மாவட்ட செயலாளர் வைரவநாதன், அதிமுக நாகை நகர செயலாளர் தங்ககதிரவன், ஒன்றிய செயலாளர்கள் நாகை குணசேகரன், திருமருகல் ராதாகிருஷ்ணன், வெளிப்பளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சக்திவேல் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.