நாமக்கல், ஏப்.16: பொதுமக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று, பிரசாரத்தின் போது கொமதேக வேட்பாளர் சின்ராஜ் கூறினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் நேற்று திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். லஞ்சம் வாங்க மாட்டேன்.