செங்கல்பட்டு, ஏப். 16: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையாட்டி, காஞ்சிபுரம் தொகுதியில் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 439 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பால்சிங் நேற்று தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளாதா என ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தொகுதியில் உள்ள 439 வாக்குச்சாவடிகளில், 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.