உத்திரமேரூர், ஏப். 14: உத்திரமேரூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் என்னை வெற்றிபெற செய்தால் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், உத்திரமேரூர், ஆதவபாக்கம், கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, பெருநகர், மானாம்பதி, கண்டிகை, காரணைமண்டபம், அத்தியூர், கம்மாளம்பூண்டி, காவனூர், குன்னவாக்கம், மலையான்குளம், திருமுக்கூடல், அண்ணாத்தூர், சாலவாக்கம், எடமச்சி, பொருப்பந்தல், தோட்டநாவல் உள்பட பல கிராமங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது, திமுக வேட்பாளர் ஜி.செல்வம் ேபசியதாவது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.