கரூர், ஏப். 9: கரூர் மக்களவை தொகுதியில் எனது வெற்றி உறுதியாகி விட்டது என்று கிருஷ்ணராயபுரம் பகுதியில் பிரசாரம் செய்த காங். வேட்பாளர் ஜோதிமணி கூறினார். கரூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம், பேரூராட்சியில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருப்பவர் மக்களையும் சந்திக்கவில்லை. எததையும் செய்யவில்லை. எங்கு சென்றாலும் தண்ணீர் பிரச்சனை என்கின்றனர். இரு தொகுதிகளை தவிர எங்கும் அரசு கல்லூரிகள் இல்லை. ஆனால் அவர் 45 கல்லூரிகளை நடத்துகிறார். தொகுதியில் உள்ள ஏழை மாணவர் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை. எனது வெற்றி உறுதியாகி விட்டது.