வருசநாடு, ஏப்.8: மேகமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த 10 வயது ஆண் புலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேகமலை வனச்சரகம் உள்ளது. இங்கு தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள பொம்முஜபுரம் மலைப்பகுதி நேற்று மதுரை மாவட்ட தலைமை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம், தேனி மாவட்ட வன அலுவலர் கவுதம், தேனி மாவட்ட வன உதவி பாதுகாவலர் கணேஷ் ,சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அசோகன், கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான், தேசிய புலிகள் காப்பக ஆணைய பிரதிநிதி மருத்துவர் ராஜ்குமார், வனசரக அலுவலர் கணேசன், முருகன், தினேஷ், கடமலைக்குண்டு வனக்குழு தலைவர் சீனி உள்ளிட்ட வன அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.