நாசரேத் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

நாசரேத், ஏப்.8: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்து வரவேற்றார். தூய யோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பெற்றனர். உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் சசிகரன், முதல்வர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: