காஞ்சிபுரம், ஏப்.8: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பிரபல தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இந்த கூரியர் சர்வீசில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குள் வந்த மின்சாதன பொருட்கள், டிவி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக டெலிவரி கொடுக்காமல் ஊழியர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டால் கொரியரில் எதுவும் வரவில்லை என தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நிர்வாகம் பொருட்கள் திருடப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். எனவே தனியார் கூரியர் நிறுவனம் சார்பில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.