வித்யாசாகர் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

செங்கல்பட்டு, ஏப்.8: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா மற்றும் கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். இயக்குனர் ஆச்சார்யா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தாமணி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ேக.மீனாட்சி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவர் ேபசியதாவது, ஆசிரியர் என்பவர் எல்லா மாணவர்களையும் தமது இதயத்தில் நிறுத்திக்கொண்டு சமச்சீரான கண்ணோட்டத்துடன் காண வேண்டும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இணைய வழி கற்பித்தல் முறைகளை தயார்படுத்தி கொள்ளவேண்டும். ஆங்கில புலமையை மெருகேற்றிக்கொள்ளவேண்டும். மாணவர்களை அன்பினால் வழிநடத்தி செல்லவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆண்டு விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: