ஈரோடு, ஏப்.7: ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் ஆலயமணி அரங்கு உள்ளது. இங்கு சிவகிரி வேல் தியேட்டர்ஸ் மற்றும் டெக்கோ ஹட் நிறுவனம் சார்பில் மகளிருக்கான சிறப்பு ஆடை அலங்கார பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. வேல் தியேட்டர்ஸ் மற்றும் ‘டெக்கோ ஹட்’ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் உமாசுரேஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. வைர நகைகள், தங்க நகைகள், பட்டுச்சேலைகள், டிசைனர்சேலைகள் என்று பல விதமான நகை மற்றும் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.