காரைக்கால், ஏப்.7: காரைக்கால் என்.ஐ.டியில் நடைபெற்று வந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் கணித துறையின் ‘வகைக்கெழு சமன்பாடுகள்’ என்ற தலைப்பிலான 2 நாள் சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. இக்கருத்தரங்கத்தை பதிவாளர் சீதாராமன் தொடங்கி வைத்து பேசியது: இதுபோன்ற கருத்தரங்கம் துறைசார் ஆராய்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும். எனவே, இதுபோன்ற கருத்தரங்கம் தொடர்ந்து நடத்தப்படுவதும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.