நாகை, ஏப்.5: மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த குரல் கொடுப்பேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.நாகை நாடாளுமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் வேளாங்கண்ணி பேரூர் மற்றும் கீழையூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். வேளாங்கண்ணி பேரூரில் உள்ள அனைத்து வார்டுகள் மற்றும் கீழையூர் ஒன்றியம் செருதூர், பிரதாபமராமபுரம்,திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, தாதன்திருவாசல், முதலியப்பன்கண்டி, கடையன்கோட்டகம், காரப்பிடாகை, சிந்தாமணி, கீழப்பிடாகை, திருப்பூண்டி, மகிழி, தலையாமழை, பொரியதுமபூர், கிராமத்துமேடு, ஆலமழை, வேப்பஞ்சேரி, பாலக்குறிச்சி, இறையான்குடி, களத்திடல்கரை, மீனம்பநல்லூர், வாழக்கரை, மேலவாழக்கரை, திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூர், வெண்மணச்சேரி, ஈசனூர், கீழையூர், மேலப்பிடாகை, கருங்கண்ணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.