பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான், ஏப்.4: சோழவந்தான் சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் ஞானஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், பள்ளி ஆலோசகர் ஆதி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் வட்டார மன்ற சேர்மன் அருள்விஜயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயசித்ரா, மணிமேகலை, வளமைய மேற்பார்வையாளர் சோபியா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: