கரூர், ஏப்.4: கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரீகன் வரவேற்று பேசினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சொத்துபாதுகாப்புக் குழுசெயலாளர் கே.சி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரவு கேட்டு பேசுகையில், எதிர் அணியினர் செய்துவரும் பொய்பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதபோக்கினை மக்களிடம் விளக்கும் வகையில் செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்படுகிறது. மேலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிதேடித்தர வேண்டும் என்றார்.