அமெரிக்காவை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 7: கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலாராணி தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்திய ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: