தஞ்சை, ஏப். 3: மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையை பேச்சுவார்த்தையில் ஒத்து கொண்டபடி உடனே வழங்ககோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை வகித்தார். மாவட்ட ஜெயபால், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்குழாய் கிணறு மின் மோட்டார் இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் 2013ம் ஆண்டு முதல் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகையை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம், இபிஎப், இஎஸ்ஐ ஆகியவற்றில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தகாரர்களுக்கு துணைபோகும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ கேட்டதற்காக பணிநீக்கம் செய்துள்ள தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென கடந்த மார்ச் 12ம் தேதி, மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி பொறியாளர் ராஜகுமாரன் தலைமையில் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கடந்தாண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் தலா ரூ.18 ஆயிரத்தை மார்ச் 27ம் தேதிக்குள் வழங்கப்படும்.