பெரம்பலூர்,மார்ச்28: தேர்தல் நெருங்குவதால் பறக்கும்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு–்ள்ளது. 2சட்டமன்றத் தொகுதிகளுக்கு இயங்கிவந்த 6பறக்கும் படைகளின் எண் ணிக்கை 18ஆக உயர்த்தப்பட்டது.
இந்தியத் தேர்தல்ஆணையத்தால் கடந்த 10ம்தேதி தமிழ்நாடு, புதுவையிலுள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.தேர்தல் விதிமுறைகளைக் கண்காணித்திடும்பொருட்டு, பெரம்பலூர்(தனி), குன் னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தனித்தனியே 3பறக்கும்படைகளும், 3நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படைகள் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி ஆய்வு களில் 20நபர்களிடமிருந்து ரூ30லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம், எல்இடி டிவி, வெள்ளிக் கொலுசுகள், பீர்பாட்டில்கள், துண்டுகள், சால்வைகள், மப்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில் மனுதாக்கல் முடிவுக்குவந்த நிலையில் தேர்தல் பறக்கும்படை களின் எண்ணிக்கை 2மடங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிக்கும் தலா 3பறக்கும்படைகளும், தலா 3நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இயங்கிவந்தன. தற்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3ஆக இருந்த பறக்கும்படைகள் தற்போது 9பறக்கும் படைகளாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2தொகுதிகளில் சுற்றிவந்த 6 பறக்கும்படையினர் தற் போது 18பறக்கும்படைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.