பத்ரகாளியம்மன் கோயில் விழா

அந்தியூர், மார்ச் 28:  ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 21ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று மகிஷாசூரமர்த்தனம் எனும் எருமை கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பக்தர்களின் வேண்டுதலுக்காக வழங்கிய 60க்கும் மேற்பட்ட எருமை கன்றுகளை கோயில் வளாகத்தில் ஏலம் விட்டு பணத்தை கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டது.

Related Stories: