முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 லாரி பறிமுதல்

முத்துப்பேட்டை, மார்ச்26: முத்துப்பேட்டை பகுதிக்கு மணல் கடத்தி திருடப்பட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து எஸ்ஐ விஜயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கீழக்காடு பைபாஸ் சாலையில் உள்ள  சோதனை சாவடியில் முகாமிட்டு இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற மூன்று  லாரிகளை மடக்கி சோதனை செய்து விசாரணை நடத்தினர். இதில் தம்பிக்கோட்டை பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் திருடி கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களான கரூர் மதியரசன் மகன் தங்கவேல் (38), சுக்குரன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் அண்ணாவி(26), வேதாரண்யம் மருதூர் காளியப்பன் மகன் பிரபாகரன் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து  விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: