டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

கந்தர்வகோட்டை, மார்ச் 26: ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் சின்னதுரை(48).  கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஆதனக்கோட்டை கடைவீதியில் நடந்து சென்றபோது அந்த வழியே வந்த டிப்பர் லாரி அவர் மீது  மோதியது. இதில் சின்னதுரை அந்த இடத்திலே பலியானார். இதுகுறித்து  கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: