காரைக்கால், மார்ச் 26: வரும் 2020 சனிப்பெயர்ச்சிக்குள் திருநள்ளாறு வரையிலாவது, காரைக்கால்-பேரளம் அகல ரயில்வே திட்டத்தை முடிக்க வேண்டும் என, திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு
வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் தனசீலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு சார்பில், நான், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் சங்க கவுரவத் தலைவர் ராஜதுரை, தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் திருச்சி கோட்ட ரயில்வே பொறியாளர் அலுவலகத்தில் கட்டுமான பிரிவை சேர்ந்த சாரங்கபாணி, உதவி முதன்மை பொறியாளர் சேகர், முதுநிலை பிரிவு பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோரை சந்தித்து பேசினோம். அப்போது, காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க தேவையான நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் தயாராக உள்ளது. இத்திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ரூ.177 கோடி நிதி ஒப்புதல் அளித்துள்ளது.