செஞ்சி, மார்ச் 22: ஆரணி மக்களவை தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் ரகுவன்ஸ்குமார் செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் அலுவலர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் சம்பந்தமாக நடந்து வரும் பணிகள், வேட்பாளர்கள் செலவுகள் குறித்து விளக்கினார். மேலும் பிராந்தி பாட்டில்கனை பறக்கும் படையினர் பிடித்தால் அதனை அரசு டாஸ்மாக் கடையில் ஒப்படைக்க வேண்டும் என காவல் துறைக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.