திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி பக்தர்கள் தொடர்ந்து 2ம் நாளாக கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி இந்தமாத (பங்குனி) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் காலை 11.41 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கிய நேரத்திலிருந்து பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர்.