திருச்சி, மார்ச் 21: திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடக்கும் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க போலீசாரின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலனை பிரதானமாகக் கொண்டு பாலின வித்தியாசமின்றி 18 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகள் மீதான் பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ேஸா கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.