பாலியல் புகார் தெரிவிக்க போலீசார் செல்போன் எண்கள் வெளியீடு

திருச்சி, மார்ச் 21: திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடக்கும் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க போலீசாரின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலனை பிரதானமாகக் கொண்டு பாலின வித்தியாசமின்றி 18 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகள் மீதான் பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ேஸா கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்களை தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்ய ெதாலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி நகரத்திற்கு உதவி ஆணையர் வெங்கடேசன் 9498104248, ஆய்வாளர் மணிகண்டன் செல்.9498157799, எஸ்ஐ ராஜராஜேஸ்வரி செல்.9842066024 ஆகியோரை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

அதேபோல் திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் டிஎஸ்பி குணசேகரன் செல்.9498139879, எஸ்ஐ ரவிச்சந்திரன் செல்.9498157272, ரகுராமன் செல்.9498158383 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: