கும்மிடிப்பூண்டி, மார்ச் 21: கும்மிடிப்பூண்டியில் இரு ேவறு கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மபொசி நகரை சேர்ந்தவர் மார்ட்டீன் ஜோசப் (51). இவர், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மின்மோட்டார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 2.5 லட்சம் மதிப்பிலான காப்பர் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.