வேலூர், மார்ச் 21: வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ₹1.60 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காட்பாடியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் காரின் பின் இருக்கையில் இருந்த கைப்பையில் இருந்து ₹1 லட்சம் பணத்தை கண்டுபிடித்தனர். அந்த பணம் தொடர்பாக கேட்டபோது விஷாரத்தில் உள்ள ஓட்டலுக்கு மளிகை பொருட்கள் வாங்க பணம் கொண்டு செல்வதாக கிறிஸ்டோபர் கூறினார். அதைத்தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.