கோபி, மார்ச் 20: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 15 அடி உயரத்திற்க தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த அணையின் மணல் போக்கி உள்ள பகுதியில் சுமார் 20 அடி ஆழம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சுழலில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை கண்காணிப்பதற்காக அணையின் இரண்டு பகுதியிலும் புறக்காவல் நிலையமும், கண்காணிப்பு கேமிராவும் அணையின் இரண்டு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. அணையில் மணல் போக்கி உள்ள பகுதியில் உயிர் பலி ஏற்படுவதால், அந்த இடத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.