வேதாரண்யம் அருகே முதியவர் தற்கொலை

வேதாரண்யம், மார்ச் 20:  வேதாரண்யம் தாலுகா நாகக்குடையானை சேர்ந்தவர் கார்த்திகேயன் (55). விவசாய கூலித்தொழிலாளி.  இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாமரத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு  ஆபத்தான நிலையில் இருந்தார். அவரைமீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: