திருவள்ளூர், மார்ச் 20: தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில், பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர்.தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களை மூடி சீல் வைப்பதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.